எந்த பிரச்சாரங்களும் இந்திய ஒற்றுமையை சிதைக்காது.. ரிஹான்னா, கிரேட்டா ட்வீட் குறித்து அமித்ஷா
டெல்லி: எந்த ஒரு பிரச்சாரங்களாலும் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்களான பாப் பாடகி ரிஹான்னா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட கருத்து தெரிவித்துள்ளனர். இதை வெளியுறவுத் துறை அமைச்சகம் கடுமையாக கண்டித்தது.
இந்த நிலையில் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் இது போன்ற ஆதரவு கருத்துகள் எல்லாம் ஒரு வகையிலான பிரச்சாரங்கள். எந்த ஒரு பிரச்சாரங்களாலும் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க முடியாது.
இந்தியா வளர்ச்சியில் அபரிமிதமான வளர்ச்சியை அடைவதை எந்த பிரச்சாரங்களும் தடுத்து நிறுத்த முடியாது. இந்தியாவின் தலையெழுத்தை எந்த பிரச்சாரங்களும் முடிவு செய்ய முடியாது. முன்னேற்றம் மட்டுமே இந்தியாவின் தலையெழுத்தை முடிவு செய்யும்.
சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம்.. ரிஹான்னா, தன்பெர்க் ட்வீட் குறித்து ராகுல் காந்தி
அது போன்ற முன்னேற்றத்தை அடைய இந்தியா ஒற்றுமையாக இருக்கும் என தனது ட்விட்டரில் அமித்ஷா தெரிவித்துள்ளார். ஒரு கருத்தை சொல்வதற்கு முன்னர் உண்மை நிலவரத்தை ஆராய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது.