ரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்? வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை
Recommended Video
டெல்லி: ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.
ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தலில், அமமுக சார்பில் ஜெயக்குமார், அதிமுக சார்பில், லோகிராஜன், திமுக சார்பில் ஏ. மகாராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு வருமான வரித்துறையினர், ஆண்டிப்பட்டியிலுள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த ரெய்டின்போது, ரூ.1.48 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. சிலர் பணத்தை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தபால் ஓட்டு ஒன்றும் கூட பறிமுதல் செய்யப்பட்டது.
ஏன் வெயிலில் கிடந்து போராடறீங்க.. வாங்க போலாம்னு.. ஸ்டாலின், கனிமொழி சொன்னாங்க.. அய்யாக்கண்ணு
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து, வருமான வரித்துறை சார்பில், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அறிக்கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து, தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதையடுத்து, ஆண்டிப்பட்டியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் இதுபற்றி முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.