டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்

Google Oneindia Tamil News

டெல்லி: மருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மருத்துவமனை மனு மீது, வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று, வரும் வெள்ளிக்கிழமை வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணம், மர்ம மரணம் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதனையடுத்து உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூழ்நிலை, அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மரணத்திற்கான காரணம் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது.

Apollo requested to set up a medical expert panel .. Friday is hearing the Supreme Court

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள், மற்ற மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அப்பல்லோ செவிலியர்கள், அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், தமிழக முன்னாள் தலைமை செயலாளர்கள் என்று பல்வேறு தரப்பினரிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில் மருத்துவக்குழு அமைக்காமல், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரிக்க அப்பல்லோ நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. தங்கள் கோரிக்கையை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்க, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது அப்பல்லோ.

அப்பல்லோ நிர்வாகம் தாக்கல் செய்த மனுவில், ஆறுமுகசாமி ஆணையத்தில் அளிக்கப்படும் தங்கள் தரவுகள் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. இதனால் மருத்துவக் குழு ஒன்றை அமைத்து, அதன் உதவியுடன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு2 நாட்கள் அமைதிக்கு பிறகு இலங்கையில் மீண்டும் இன்று குண்டு சத்தம்! தியேட்டர் அருகே பரபரப்பு

ஆனால் ஆணையத்தின் விசாரணை 90% முடிவடைந்துள்ள நிலையில், மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க கோருவதை ஏற்க முடியாது என கூறி அப்பல்லோ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

இதனையடுத்து அப்பல்லோ நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்துள்ள மேல்முயைீட்டு மனு மீது, வரும் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Supreme Court has announced that it will conduct an inquiry on Friday into the Apollo Hospital petition filed for setting up a medical expert committee
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X