வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை
Recommended Video
டெல்லி: வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என அருண் ஜேட்லியின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் கட்டமாக நேற்றுமுன்தினம் அவர் பிரான்ஸ் சென்றார்.
அருண் ஜேட்லி
ஜேட்லி காலமானார்
இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான அருண்ஜேட்லி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜேட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
ஜேட்லி காலமானார்
இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சரான அருண்ஜேட்லி மூச்சுத்திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜேட்லி சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.
டெல்லி
அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலறிந்ததும் ஹைதராபாத் சென்று கொண்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு டெல்லி திரும்பினார்.
தொலைபேசி
அது போல் பிரதமர் நரேந்திர மோடியும் தனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு டெல்லி விரைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஜேட்லியின் மனைவி, மகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டார் பிரதமர் மோடி.
வெளிநாட்டுப் பயணம்
அப்போது அவர்களுக்கு அவர் ஆறுதல் கூறினார். இதையடுத்து வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் என ஜேட்லியின் மனைவியும் மகனும் கோரிக்கை விடுத்தனர்.