NRC: டெல்லி பாஜக தலைவர் முதல் ஆளாக டெல்லியை விட்டு வெளியேறும் நிலை வரும் : அரவிந்த் கெஜ்ரிவால்
Recommended Video
டெல்லி: டெல்லியில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி டெல்லியில் இருந்து முதல் ஆளாக வெளியேற வேண்டி வரும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
நாட்டில் எங்கும் இல்லாத ஒன்றாக அஸ்ஸாம் மாநிலத்தில் தான் தேசிய குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படுகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்களை தடுப்பதற்காக இப்படி ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டை அநாகரீகத்துக்கு தள்ளும் பசு பாதுகாப்பு கும்பல்: பாஜக கூட்டணி கட்சி ஜேடியூ காட்டம்
|
தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு
அண்மையில் அஸ்ஸாம் மாநில தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 19லட்சம் பேர் பெயர்கள் இடம் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இந்திய குடிமகன் என்பதை நிரூபிக்க தீர்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லியிலும் என்ஆர்சி
இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தை போல் மேற்கு வங்கம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் நீடிக்கப்பட வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஊடுருவல்காரர்கள் தாக்கு
டெல்லி மாநில பாஜக தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி அவ்வப்போது அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து பேசிவந்த நிலையில், தெற்கு டெல்லியில் ஒரு செய்தியாளர் தாக்கப்பட்டதற்கு ஊடுருவல்காரர்கள் காரணம் என விமர்சித்து இருந்தார்.
டெல்லியை விட்டு வெளியேறணும்
இதற்கு பதிலடியாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்பட்டால் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி (பீகாரில் பிறந்தவர்) முதல் ஆளாக டெல்லியில் இருந்து வெளியேற வேண்டி வரும் என்றார்.