டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கனவில் வந்து கடவுள் கூறினார்.. அதான் 2 வயது மகளை ஆற்றில் வீசினேன்.. தந்தை பரபரப்பு வாக்குமூலம்

Google Oneindia Tamil News

Recommended Video

    கடவுள் கூறியதால் மகளை ஆற்றில் வீசினேன்.. தந்தை பரபரப்பு-வீடியோ

    டெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் கடவுள் கூறியதால் மகளை ஆற்றில் வீசியதாக கூறிய தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    அஸ்ஸாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் டமால்பூரை சேர்ந்தவர் பீர்பால் பாரோ (35). இவரது மனைவி ஜூனு பாரோ (30). இவர்களுக்கு 2 வயதில் ரிஷிகா என்ற மகள் உள்ளார்.

    கடந்த சனிக்கிழமை அந்த குழந்தையை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார் பீர்பால். சிறிது நேரம் கழித்து தனியாக வீட்டுக்கு வந்தார்.

     'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள் 'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்

    ஆற்றில் தேடுதல்

    ஆற்றில் தேடுதல்

    உடனே குழந்தை எங்கே என ஜூனு கேட்டார். அதற்கு அவர் போர்லா ஆற்றில் மகளை தள்ளிவிட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜூனு, தனது உறவினர்களிடம் கூறி குழந்தையை ஆற்றில் தேடினார்.

    குழந்தையின் சடலம்

    குழந்தையின் சடலம்

    அப்போது குழந்தை கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் கூறியதை அடுத்து தீயணைப்பு துறையினர் குழந்தையை தேடினர். அப்போது ஆற்றிலிருந்து குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

    பீர்பால் கைது

    பீர்பால் கைது

    இதையடுத்து போலீஸார் பீர்பாலை கைது செய்து விசாரித்த போது கடவுள் எனது கனவில் வந்து இது போல் மகளை ஆற்றில் வீச கூறினார். அதனால் நானும் ஆற்றில் வீசினேன் என தெரிவித்துள்ளார்.

    பில்லி சூனியம்

    பில்லி சூனியம்

    கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த பீர்பால் பில்லி சூனியத்தை நம்பினார், மந்திரவாதியின் ஆலோசனையின் பேரிலேயே அவர் இப்படி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    பெற்ற குழந்தை

    பெற்ற குழந்தை

    மன நிலை சரியில்லாதவர் போல் இருப்பதால் இவர் மந்திரவாதியின் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி செய்தாரா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசி கொன்ற விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Assam father threw his daughter in a river in Tamulpur of Baksa District.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X