டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அட்லஸ் சைக்கிள் நிறுவனரின் மனைவி தூக்கு போட்டு தற்கொலை.. டெல்லியில் அதிர்ச்சி

Google Oneindia Tamil News

டெல்லி: புகழ் பெற்ற அட்லஸ் சைக்கள் நிறுவன உரிமையாளர் சஞ்சய் கபூரின் மனைவி நடாஷ், டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் புகழ் பெற்ற சைக்கிள் நிறுவனம் அட்லஸ். 70 ஆண்டு பாரம்பரியம் கொண்ட இந்த நிறுவனத்தின் சைக்கிள்கள் தான் பல இடங்களில் நிறைந்த காண்ப்படுகிறது.

 Atlas Cycles owner wife commits suicide in delhi

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர். இவர் தனது நடாஷ் கபூர் (57) உடன் டெல்லியின் போஸ் அவுரங்கஷிப் பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் சஞ்சய் கபூர் இல்லாத நேரம் பார்த்து நடாஷ் கபூர் திடிரென வீட்டின் பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார் நடாஷின் உடலை மீட்டு கங்கா ராம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்ட்டது. இதையடுத்து சஞ்சய் கபூரின் குடும்பத்தினர் நடாஷின் உடலை லோதி சாலையில் அமைந்துள்ள ஒரு தகனத்தில் தகனம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் தற்கொலை நடந்த போது நடாஷிவின் மகள் மற்றும் மகன் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள். நடாஷ் தற்கொலை செய்து கொள்ளும் முன் எழுதிய கடிதத்தில் தன் தங்கையை குடும்பத்தார் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார்.

இதனிடையே அட்லஸ் உரிமையாளரின் மனைவி தற்கொலை சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்த டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
57-year-old Natash Kapur, wife of Atlas Cycles owner, commits suicide at delhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X