Ayodhya Case Hearing: அயோத்தி வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவு.. தீர்ப்பு ஒத்திவைப்பு
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது.
டெல்லி: பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் அயோத்தி வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் நடக்கிறது. இதனால் உத்தர பிரதேசத்தில் அயோத்தி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மொத்தம் 14 அமைப்புகள் சார்பாக இதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் மத்தியஸ்தர் குழுவின் சமரசம் தோல்வியில் முடிந்தது. சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் இந்த வழக்கில் முக்கிய மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இன்று இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கும். இதனால் அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நவம்பர் 17க்குள் இதில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The CJ informed me in Court today he has decided to de-tag my Petition i.e., sent to another Court to argue my fundamental right prayer. The court said they will only hear the appeals of suits for title to property
— Subramanian Swamy (@Swamy39) October 16, 2019