அயோத்தி ராமர் கோவில்... அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு விடுத்த 'அறக்கட்டளை '
டெல்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று நேரில் அழைப்பு விடுத்தனர்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளையை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இதில் 15 பேர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த அறக்கட்டளையின் முதல் கூட்டம் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் பராசரன் இல்லத்தில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் தலைவராக நித்ய கோபால் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியை நித்ய கோபால் தாஸ் தலைமையிலான அறக்கட்டளை நிர்வாகிகள் இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின் போது அயோத்தியில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
Comments
English summary
Ayodhya Ram Mandir Trust members today met PM Modi and invited him for the foundation laying ceremony.
Story first published: Thursday, February 20, 2020, 20:06 [IST]