அயோத்தி வழக்கு.. பாஜக தலைமையகத்தில் அவசர ஆலோசனைக்கு அமித்ஷா அழைப்பு
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் நிலையில் அவசர ஆலோசனைக்கு பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார்.
70 ஆண்டுகால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அயோத்தி பிரச்சினையில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதை 5 பேர் கொண்ட நீதிபதிகள் வழங்குகின்றனர்.
இந்த நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்துக்கு அண்டை மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா அயோத்தி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக அவர் இன்று காலை 10 மணிக்கு பாஜக தலைமையகத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
1800 போலீசார் குவிப்பு.. அனைத்து இடங்களிலும் ரோந்து.. கோவையில் கூடுதல் பாதுகாப்பு!
இதைத் தொடர்ந்து அவர் பாஜகவின் நிலை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவார் என தெரிகிறது. அது போல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் டெல்லி செல்கிறார்.