112 பேருக்கு பத்ம விருதுகள்.. மதுரை சின்னப் பிள்ளை, பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ!
டெல்லி: 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த முதுபெரும் பெண்மணி சின்னப்பிள்ளை, ஆன்மீகத் தலைவர் பங்காரு அடிகளார் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
112 பேரில் 4 பேருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கப்படுகிறது. 14 பேருக்கு பத்மபூஷண் விருதும்.. 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்படுகிறது.
விருது பெற தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 21 பேர் பெண்கள் ஆவர். 11 பேர் வெளிநாட்டினர் அல்லது வெளிநாடு வாழ் இந்தியர்கள். 3 பேருக்கு மறைவுக்குப் பின்னர் விருது வழங்கப்படுகிறது. விருது பெறும் 112 பேரில் ஒருவர் திருநங்கை சமூகத்தைச் சேர்ந்தவர்
தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் பதம விபூஷண், பத்ம பூஷண் விருதுகள் கிடைக்கவில்லை.
பத்மஸ்ரீ விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள்
- பங்காரு அடிகளார்
- டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்
- திருநங்கை நர்த்தகி நடராஜ்
- மதுரை சின்னப்பிள்ளை
- ஆர்.வி. ரமணி
- இசையமைப்பாளர் ஆனந்தன் சிவமணி
- ராமசாமி வெங்கடசாமி
4 பேருக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்துள்ளது
- தீஜன் பய்
- இஸ்மாயில் ஓமர் குல்லேலா
- அனில்குமார் மணிபாய் நாயக்
- பலவ்ந்த் மோரீஸ்வர் புரந்தரே
14 பேருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்துள்ளது
- அசோக் லட்சுமண் ராவ் குகடே
- கரிய முண்டா
- புத்ததிய முகர்ஜி
- மோகன்லால் விஸ்வநாதன் நாயர் (மலையாள நடிகர்)
- நம்பி நாராயணன்
- குல்தீப் நய்யார்
- பச்சேந்திரி பால்
- வி.கே சுங்லு
- ஹுக்கும்தேவ் நாராயண் யாதவ்
- ஜான் சேம்பர்ஸ்
- சுக்தேவ் சிங் தின்ட்சா
- பிரவீண் கோர்தன்
- மகசாய் தரம் பால் குலாத்தி
- தர்ஷன் லால் ஜெயின்
இவர்கள் தவிர 94 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் முக்கியமானவர்கள்
சுனில் சேட்ரி, நடிகர் பிரபுதேவா, இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன்,