வங்கி வாடிக்கையாளர்களே வேலைகளை சீக்கிரம் முடிங்க.. இந்த மாதம் இன்னும் 14 நாளில் 6 நாள் லீவுதான்
டெல்லி: பல விடுமுறை நாட்கள் அடுத்தடுத்து வருவதன் காரணமாக, அக்டோபரில் அடுத்த 14 நாட்களில் ஆறு நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது.
குறிப்பிட்ட இந்த தேதிகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும், என்பதால், வாடிக்கையாளர்கள், முன்கூட்டியே பணத்தை எடுப்பது போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்வது நல்லது.
அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் விடுமுறை. அக்டோபர் 22 ஆம் தேதி, அரசுகள் அறிவித்த மெகா வங்கி இணைப்புக்கு எதிராக வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் அன்றும் வங்கிகள் மூடப்படும்.
அக்டோபர் 22 ஐத் தொடர்ந்து, பல்வேறு பண்டிகைகளின் காரணமாக வங்கிகள் மீண்டும் அக்டோபர் 26 முதல் அக்டோபர் 29 வரை நீண்ட இடைவெளியில் மூடப்படும். தீபாவளி காரணமாக ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27), கோவர்தன் பூஜை காரணமாக திங்கள் (அக்டோபர் 28) மற்றும் பாய் தூஜுக்கு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) வங்கிகள் மூடப்படும்.
வாடிக்கையாளர்களே எனவே, உஷாராக உங்கள் வங்கிச் சேவைகளை முன்கூட்டியே, முடித்துக்கொள்ளுங்கள்.