டாக்டர்கள், வக்கீல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாஜகவின் பிச்சைக்காரர்! நம்பிட்டோம்!
டெல்லி: 17-ஆவது நாடாளுமன்றத்துக்கு டாக்டர்கள், வக்கீல்களுக்கு மத்தியில் நாடாளுமன்றத்துக்கு பாஜக சார்பில் பிச்சைக்காரர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
17ஆவது மக்களவை தேர்தல் கடந்த ஏப் 11-ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த 23-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு தேர்வானவர்களின் அவர்களது தொழில்கள் வாரிய கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் தொழிலதிபர்கள் - 121
விவசாயிகள்- 99
சமூக சேவகர்கள்- 88
அரசியல்வாதிகள்- 86
டாக்டர்கள்- 32
வழக்கறிஞர்ள்- 26
மாத சம்பளதாரர்கள்- 12
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்- 8
ஆசிரியர்கள்- 5
எழுத்தாளர்கள்- 4
குடும்பத்தலைவிகள்- 4
பாடகர்கள்- 4
சுயதொழில் செய்பவர்கள்- 4
என்ஜினியர்கள்- 4
பேராசிரியர்கள்- 2
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள்- 2
கல்வியாளர்கள்- 2
கட்டடம் கட்டும் ஒப்பந்ததாரர்கள்- 2
கால்நடை மருத்துவர்- 1
விளையாட்டு வீரர்- 1
தொழிலாளர்- 1
நரேட்டர்- 1
சிஏ- 1
பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர், நீதிபதி, பிச்சைக்காரர் ஆகியோர் தலா ஒருவர்.
இதில் எல்லாமே ஓகே. பிச்சைக்காரர் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பார்க்கும் போது என்ன ஆச்சரியம். போபாலில் பாஜக சார்பில் போட்டியிட்ட சாமியார் சாத்வி பிரக்யா வேட்பு மனுவில் தன்னை பிச்சைக்காரர் என தெரிவித்துள்ளார்.