உஷார்..... பிரதமர் மோடி நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு
டெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கான பிரதமர் மோடியின் நிவாரண நிதியின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான பிரதமர் மோடியின் PM Cares Fund- ன் UPI ID இதுதான் pmcares@sbi
ஆனால் சமூக விரோதிகள் இதிலும் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இப்படியான போலி கணக்குகளில் ஒன்றை புவனேஷ்வர் குமார் என்பவர் உருவாக்கி இருப்பதை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்தும் உள்ளன.
தற்போது அந்த நபரை புலனாய்வுத்துறை அதிகாரிகள் குழு தேடி வருகிறது. இத்தகைய போலி வங்கி கணக்குகளில் நீங்கள் நிவாரண நிதியை செலுத்த வேண்டாம்.
Recommended Video
கொரோனா: ஏப்.14-க்குப் பின் லாக்டவுன் நீட்டிப்பு இல்லை- மத்திய அரசு திட்டவட்டம்
நீங்கள் பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் செலுத்த விரும்பினால் pmcares@sbi என்கிற UPI ID மட்டும் பயன்படுத்துங்கள்.
Comments
English summary
In the backdrop of Prime Minister Narendra Modi calling on the people to donate towards fighting the spread of the coronavirus, seamsters have already started circulating a fake UPI ID.
Story first published: Monday, March 30, 2020, 11:18 [IST]