குடியுரிமை சட்ட திருத்தத்துக்குதான் ஆதரவு- என்.ஆர்.சிக்கு எதிர்ப்பு: ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்
Recommended Video
போராட்டத்தின் போது ஹாங்காங் மாணவர்கள் செய்தார்களே!.. நினைவிருக்கா?.. அதையே செய்த ஜாமியா மாணவர்கள்!
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு மட்டுமே பிஜூ ஜனதா தளம் ஆதரவு தருவதாகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) நடைமுறையை எதிர்ப்பதாகவும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை லோக்சபா, ராஜ்யசபா இரண்டிலும் பிஜூ ஜனதா தளம் ஆதரித்தது. இது தொடர்பாக நவீன் பட்நாயக் கூறியதாவது:
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தம் என்பது 3 நாடுகளின் சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது. இந்த நாட்டின் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
அதனால்தான் பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கிறது. ஆனால் என்.ஆர்.சி. என்பது மக்களை நேரடியாக பாதிக்கக் கூடியது. அதனால் அதை கடுமையாக எதிர்க்கிறோம்.
இவ்வாறு நவீன் பட்நாயக் தெரிவித்தார்.
Comments
English summary
Odisha Chief Minsiter Naveen Patnaik said that BJD will not support to the Centres NRC.