கலக்கும் பாஜக.. லோக்சபா தேர்தலில் நாடு முழுவதும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை!
டெல்லி: மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பாஜக 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை பெற்று வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில் ஒரு சில மாநிலங்களை தவிர நாடு முழுவதுமே பாஜக கூட்டணிதான் முன்னிலை வகிக்கிறது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 330க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜக மட்டும் 290 தொகுதிகளில் தனித்து முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, அசாம் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜகவே முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி பாஜக கூட்டணியே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
செய்ய வேண்டியதை சரியாக செய்த எடப்பாடி.. ஆட்சியை தக்க வைக்க செய்த தியாகம்.. செம ராஜதந்திரம்!
பாஜக மத்தியில் ஆட்சியமைப்பதை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக ஒரே அணியில் திரண்டு வேலை செய்தன. ஆனால் பாஜக தனித்தே 290 இடங்களில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.