ரபேல் விவகாரத்தில் ஊழல் புகார்.. ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க கோரி பாஜகவின் நாடு தழுவிய போராட்டம்
Recommended Video
டெல்லி: ரபேல் விவகாரத்தில் ஊழல் புகார் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க கோரி பாஜக சார்பில் அழைப்பு விடுத்துள்ள போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் தொடங்கியது.
ரபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் இந்த ஒப்பந்தத்தில் எந்த வித சந்தேகங்களுக்கு இடமில்லை என நேற்று முன் தினம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த ஒப்பந்த முறைகேடு குறித்து விசாரணை கோரிய மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் பொய் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க கோரி பாஜகவினர் நேற்று டெல்லியில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கும் அக்கட்சியினர் அழைப்பு விடுத்தனர். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று போராட்டம் தொடங்கியது.