பாஜக- ஆர்.எஸ்.ஸ். ஒருங்கிணைப்பு குழு கூட்டம் செப்.7-ல் கூடுகிறது
டெல்லி: பாஜக, அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செப்டம்பர் 7-ந் தேதி ராஜஸ்தானில் உள்ள புஷ்கரில் நடைபெற உள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்திட்டங்களை முழு வீச்சில் செயல்படுத்துவதில் கவனமாக இருக்கிறது. தமது செயல்திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்துகிறதா? என்பதை ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.
இந்நிலையில் ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் பாஜக-ஆர்.எஸ்.எஸ். இடையேயான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செப்டம்பர் 7-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது. மத்தியில் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்று 3 மாதங்களாகின்றன.
இந்நிலையில் புஷ்கரில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்கள், இதை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன. இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பாஜக செயல் தலைவர் நட்டா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பல்வேறு அமைப்புகளுக்கும் பாஜகவுக்கும் இடையேயான முரண்பாடுகளை களைய இந்த கூட்டம் உதவும் என்றும் கூறப்படுகிறது.