நடிகை குஷ்புவுக்கு திருக்குறள் மூலம் பாஜகவில் சேர தூது விட்ட ஆசீர்வாதம் ஆச்சாரி
டெல்லி: நடிகை குஷ்புவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த கையோடு வாங்க.. வந்து பாஜகவில் சேருங்க.. என்று திருக்குறள் மூலம் தூதுவிட்டிருக்கிறார் அந்த கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி.
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு நடிகை குஷ்புவுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நிலவும் கோஷ்டி பூசல்களில் குஷ்புவும் பத்தோடு பதினொன்று என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
பின்னர் காங்கிரஸ் கட்சியின் தீவிர செயல்பாடுகளில் இருந்து தம்மை குறைத்துக் கொண்டவராக வெளிப்படுத்தினார் குஷ்பு. ஆனாலும் இன்னமும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார் குஷ்பு. அண்மையில் கொரோனாவால் எம்.பி. வசந்தகுமார் மரணமடைந்தார்.
புதிய விவசாய சட்டங்களை ஆதரித்து அதிமுக-பாஜக கூட்டம் நடத்த முடியுமா? கொங்கு ஈஸ்வரன் கேள்வி
குஷ்பு ஆதங்கம்- கோபம்
அவரது படத்திறப்பு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு குஷ்பு அழைக்கப்படவில்லை. இந்த நிகழ்ச்சியை கூட டிவியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என குஷ்பு ஆதங்கப்பட்டிருந்தார். அத்துடன் ஈகோவால் கட்சியை பலவீனப்படுத்தாதீர்கள் என்றும் காட்டம் காட்டியிருந்தார் குஷ்பு.
பாஜகவுக்கு தாவுகிறாரா?
இதனிடையே குஷ்பு பாஜகவுக்கு தாவுகிறார் என அந்த கட்சியின் தரப்பில் தொடர்ந்து செய்தி பரப்பப்படுகிறது. நடிகை குஷ்புவை கட்சிக்குள் இழுப்பதில் பாஜகவில் பெரிய போட்டா போட்டியே நடக்கிறது என்பதை இன்று அந்த கட்சியின் ஆசீர்வாதம் ஆச்சாரி போட்ட ட்வீட் ஒன்றும் உறுதி செய்திருக்கிறது.
ஆசீர்வாதம் ஆச்சாரி ட்வீட்
நடிகை குஷ்புவுக்கு இன்று பிறந்த நாள். இதனையொட்டி வாழ்த்து தெரிவித்திருக்கும் ஆசீர்வாதம் ஆச்சாரி, எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி இருக்கிறார். அதாவது இந்த குறளுக்கு மு. வரதராசனார் தரும் விளக்கம் என்னவெனில், தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார் என்பதாகும்.
வாங்க.. யாராலும் ஜெயிக்க முடியாது
நீங்க பாஜகவுக்கு வாங்க.. உங்களை வெல்ல யாரும் இல்லை என்பதை குறிப்பிடும் வகையில்தான் ஆசீர்வாதம் ஆச்சாரி திருக்குறளை மேற்கோள்காட்டியிருக்கிறார். இருந்தபோதும் நடிகை குஷ்புவும் ஆசீர்வாதம் ஆச்சாரியின் கருத்துக்கு நன்றி தெரிவித்து புரியாத புதிரை நீட்டிக்கவே செய்திருக்கிறார். என்னமோ நடக்கிறது!