டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போதைய நிலையில் 1.5லட்சத்துக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கும்அதிகமானோர் இறந்துள்ளனர். தினமும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

bJP spokesperson Sambit Patra admitted to hospital after Covid-19 symptoms

இந்த சூழலில் மத்தியிலும் ஆளும் பாஜக கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கொரோனா அறிகுறிகளுடன் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பித் பத்ரா குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த 8 பேருக்கு நிபந்தனை ஜாமீன்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் செய்தி சேனல்களின் விவாதங்களில் சம்பித் பத்ராதான் பாஜகவின் முகமாக அதிகம் தென்படுவார்.

English summary
bJP national spokesperson Sambit Patra has been admitted to a private hospital after he showed symptoms of Covid-19
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X