மோடி பிறந்த நாளையொட்டி 1 வாரம் வேற லெவல் விழா.. எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்க பாஜக
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையயொட்டி, 'மக்களுக்கு சேவை செய்யுங்கள்' என்ற பெயரில் ஒரு வாரம் கொண்டாட உள்ளது, பாஜக.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள், வரும் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எதிலுமே தனித்துவத்தை பேணும் பாஜக இதை மட்டும் சும்மா விட்டுவிடுவா, அதற்கென்று ஒரு கோஷத்தோடு கிளம்பிவிட்டது.
லோக்சபா தேர்தலுக்கு முனபாக சவுக்கிதார் என்ற அடைமொழியோடு மோடி அழைக்கப்பட்டார். அதாவது, நாட்டின் பாதுகாவலர் மோடிதான் என்ற கருத்தை பதிய வைக்க இவ்வாறு ஒரு கோஷம் முன் வைக்கப்பட்டது.
இப்போது, 'மக்களுக்கு சேவை செய்யுங்கள்' என்று ஒரு கோஷத்தை எழுப்பி நரேந்திர மோடி பிறந்த நாளை ஒரு வாரத்திற்கு கொண்டாட உள்ளது, பாஜக. ஹிந்தியில் சேவா சம்பத் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளனர்.
பிறந்த நாளைக்கு முன்பாக செப்டம்பர் 14ம் தேதி துவங்கி, பிறந்த நாள் நிறைவடைந்த பிறகு, செப்டம்பர் 20ம் தேதிவரை, இந்த கொண்டாட்டம் நீடிக்கும் என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்லா பந்துகளிலும் விளம்பரம் என்ற சிக்சரை, அடிச்சா எப்படி என்ற யோசனையில் ஆழ்ந்துள்ளன எதிர்க்கட்சிகள்.