பாஜகவின் தேசிய தலைவராக வரும் 20-ல் தேர்வாகிறார் ஜே.பி. நட்டா
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக தற்போதைய செயல் தலைவர் ஜே.பி. நட்டா வரும் 20-ந் தேதி தேர்வு செய்யப்பட உள்ளார்.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற கொள்கை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பாஜக தேசிய தலைவரான அமித்ஷா, உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து பாஜகவில் செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமிக்கப்பட்டார். இருப்பினும் ஜே.பி. நட்டாவுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை என்கிற விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 20 அல்லது 21-ந் தேதி பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா அறிவிக்கப்படுவார் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். இருப்பினும் பாஜகவின் மாநில தலைவர்கள் நியமனங்கள் முழுமை அடையாமல் உள்ளன.
கடும் அதிருப்தியில் திமுக... சோனியா காந்தியுடன் கே.எஸ். அழகிரி திடீர் சந்திப்பு
பாஜகவின் கட்சி விதிகளின்படி 50% மாநில தலைவர்களைவாது நியமித்த நிலையில்தான் தேசிய தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் அடுத்த ஓரிரு நாட்களில் மாநில பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.