கர்நாடக அரசு கலைந்த பின்னணியில் உள்குத்தும் உள்ளது.. ராகுல் காந்தி பரபர குற்றச்சாட்டு
டெல்லி: கர்நாடகாவில், காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி கலைந்ததன் பின்னணியில், உள்குத்தும் இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக ஆபரேஷன் லோட்டஸ் செய்ததால்தான், கர்நாடக அரசு கலைந்ததாக ஒரு பேச்சு இருந்தாலும் கூட, கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த, கோஷ்டி பூசலைத்தான் பாஜக பயன்படுத்திக் கொண்டு ஆட்சியை கலைத்தது என்பதே கள நிலவரம்.
From its first day, the Cong-JDS alliance in Karnataka was a target for vested interests, both within & outside, who saw the alliance as a threat & an obstacle in their path to power.
— Rahul Gandhi (@RahulGandhi) July 23, 2019
Their greed won today.
Democracy, honesty & the people of Karnataka lost.
இதையே, ராகுல் காந்தியும், தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
முதல் நாளிலிருந்து, கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்து சொந்த நலன்களுக்காக குறி வைத்து தாக்கப்பட்டது. இந்த கூட்டணியை அச்சுறுத்தலாகவும், தங்கள் அதிகாரத்திற்கான பாதையில் ஒரு தடையாகவும் பார்த்தார்கள்.
அவர்களின் பேராசை இன்று வென்றது. ஜனநாயகம், நேர்மை மற்றும் கர்நாடக மக்களுக்கே இழப்பு. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.