பட்ஜெட் 2020: வரிகளில் மாற்றம்.. எந்த பொருள் விலை ஏறும், எது விலை குறையும்?
Recommended Video
டெல்லி: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2020-21 பட்ஜெட் எதிரொலியால், சில பொருட்களின் விலை ஏற உள்ளது, சில பொருட்கள் விலை குறைய உள்ளது.
வரி விதிப்புகளில், ஏற்படும் மாற்றங்களை பொறுத்து, இந்த விலையேற்றம் மற்றும் விலை குறைப்பு அமலுக்கு வர உள்ளது. இதோ அது குறித்த ஒரு பார்வை:
விலை உயரும் பொருட்கள்:
- சிகரெட், புகையிலை பொருட்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயரும்
- இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள் மற்றும் பர்னிச்சர்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது
- மருத்துவ உபகரணங்கள் இறக்குமதி மீது செஸ் வரி வசூலிக்கப்பட்டுள்ளது
- சுவர் மின் விசிறிகள் மீதான சுங்க வரி 7.5% லிருந்து 20%ஆக அதிகரித்துள்ளது
- பீங்கான் அல்லது சீனா பீங்கான், களிமண் இரும்பு, எஃகு, தாமிரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட மேஜைப் பாத்திரங்கள் / சமையலறைப் பொருட்களின் மீதான வரி 20% ஆக, அதாவது இரட்டிப்பாகியுள்ளது
விலை குறைய உள்ள பொருட்கள்:
- செய்தி பிரின்ட், குறைந்த எடை பூசப்பட்ட காகிதத்திற்கான சுங்க வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது
- சுத்திகரிக்கப்பட்ட டெரெப்தாலிக் அமிலத்தின் (ஆடை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்க பயன்படும்) மீதான வரி ரத்து செய்யப்பட்டது
- கச்சா சர்க்கரை, வேளாண் விலங்கு சார்ந்த பொருட்கள், ஆடையெடுத்த பால், சில மது பானங்கள், சோயா ஃபைபர், சோயா புரதம் ஆகியவற்றிற்கு வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.