ஒன்றாக சேர்ந்து தேசிய கீதம்.. டெல்லி ஜம்மா மசூதியில் நெகிழவைக்கும் சிஏஏ போராட்டம்.. செம வீடியோ
நேற்று டெல்லி ஜம்மா மசூதியில் நடைப்பெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய கீதம் பாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
டெல்லி: நேற்று டெல்லி ஜம்மா மசூதியில் நடைப்பெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மக்கள் எல்லோரும் சேர்ந்து தேசிய கீதம் பாடியது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக மக்கள் மற்றும் மாணவ அமைப்புகள், அரசியல் கட்சிகள் தீவிரமாக போராடி வருகிறது. இன்னொரு பக்கம் நாடு முழுக்க பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னையில் பல லட்சம் மாணவர்கள் போராடி வருகிறார்கள். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆங்காங்கே போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
நேற்று எப்படி
இந்த நிலையில் நேற்றும் நாடு முழுக்க பல இடங்களில் சிஏஏவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. நேற்று மாலையில் இருந்து இரவு முழுக்க பல இடங்களில் போராட்டம் நடந்தது ஜேஎன்யூ மாணவர்கள் இரவு முழுக்க சிஏஏவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் சக மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராடினார்கள்.
சிஏஏ எதிர்ப்பு
அதேபோல் உத்தர பிரதேசத்தில் உள்ள ஜாமியா மிலியா பல்கலையிலும் போராட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் நேற்று ஜம்மா மசூதியில் மாலையில் இருந்து இரவு வரை போராட்டம் களைகட்டியது.
மக்கள் போராட்டம்
பல நூறு பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களை விட இந்துக்கள்தான் அதிகமாக கலந்து கொண்டார்கள். ஜம்மா மசூதியில் உட்பக்கம் தொடங்கி வாசல் வரை மக்கள் நின்று கொண்டு இருந்தனர்.
|
கடைசியில் என்ன
போராட்டத்தின் இறுதியில் எல்லோரும் சேர்ந்து ஒன்றாக தேசிய கீதம் பாடினார்கள். இந்த விஷயம் பார்க்கவே கண்கொள்ளா கட்சியாக இருந்தது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் எல்லோரும் கைகோர்த்து தேசிய கீதம் பாடினார்கள். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.