Breaking News Live: பாஜக உண்மைகளை மறைக்கிறது.. அம்பானிக்கு மோடி உதவியுள்ளார்.. ராகுல் பரபர பேட்டி
டெல்லி: ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை தற்போது ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இந்த அறிக்கையை தாக்கல் செய்தார். 141 பக்க அறிக்கையில் மற்ற விமான கொள்முதல் குறித்தும் விவரங்கள் அடங்கி உள்ளது.
இந்த அறிக்கை இன்று லோக்சபாவிலும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இன்றுதான் இந்த ஆட்சியின் கடைசி லோக்சபா கூட்ட தொடர் ஆகும்.
ஏஎன்ஐ செய்திப்படி, மோடி அரசு ரபேல் விமான கொள்முதலில் 17.8 சதவீதம் விலை குறைப்பு செய்துள்ளதாக சிஏஜி அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரபேல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் அவை 12 மணி வரை ஒத்திவைப்பு
பிரதமர் மோடிதான் அனில் அம்பானிக்கு பணத்தை கொடுத்துள்ளார் - ராகுல் காந்தி
உச்ச நீதிமன்றத்தில் பாஜக உண்மைகளை மறைத்துவிட்டது - ராகுல் காந்தி
முக்கிய ஆவணங்களை பாஜக உச்ச நீதிமன்றத்தில் வழங்கவில்லை
Rahul Gandhi: Argument of Prime Minister, Defence Minister & Finance Minister on why a new deal was reqd was -No.1- price & No. 2-Air Force needed planes quickly. The fact of the matter is, the new deal signed by Narendra Modi gets India the aircrafts later than the original deal pic.twitter.com/YxlB62HuRQ
— ANI (@ANI) February 13, 2019
சிஏஜி அறிக்கையில் பல முக்கிய விவரங்கள் எதுவும் இல்லை - ராகுல் காந்தி
சிஏஜி அறிக்கை வெற்று காகிதம் போல உள்ளது - ராகுல் காந்தி
முலாயம் சிங்கின் கருத்தை நான் ஏற்கவில்லை: அவர் மீது மரியாதை உள்ளது - ராகுல் காந்தி
மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்று முலாயம் குறிப்பிட்டு இருந்தார்