Brealing News Live: தமிழகத்திற்கு உடனே 9.19 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.. காவிரி ஆணையம் அதிரடி
டெல்லி: தமிழகத்திற்கு காவிரியிலிருந்து 9.2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஆணையத்தின் தலைவர் மசூத்உசேன் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 9.2 டிஎம்சி. தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியிலிருந்து உடனடியாக திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
Newest First Oldest First
சென்னை
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வெற்றி மோடிக்காக கிடைத்த வெற்றி என ரஜினிகாந்த் கருத்து. தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசியதே பாஜக தோல்விக்கு காரணம். சென்னை போயஸ் கார்டனில் ரஜினி பேட்டி
ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகக்கூடாது. ராகுலுக்கு தலைமைப்பண்பு இல்லை என்பதை ஏற்கமுடியாது - ரஜினி
Comments
English summary
Cauvery Management commission meeting held today. Tamilnadu govt plans to oppose dam in Mekedatu.