டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

19 மாநிலங்களில் மதுரை உட்பட 110 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். மொத்தம் 30 வழக்குகளுக்காக இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஊழல், நடத்தை விதிமீறல்கள், ஆயுத கடத்தல் ஆகியவை தொடர்பான 30 வழக்குகளுக்காக 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லி, பாரத்பூர், மும்பை, சண்டிகர், ஜம்மு, ஶ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, கான்பூர், ராய்ப்பூர், ஹைதராபாத், கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ உள்ளிட்ட நகரங்களில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

CBI conduct raids at 110 locations in 30 cases

தமிழகத்தில் மதுரையிலும் சோதனை நடத்தப்படுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இம்மாதத்தின் தொடக்கத்தில் ரூ1,139 கோடி வங்கி முறைகேடுகள் தொடர்பாக 13 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர்.

சிபிஐ இயக்குநர் ரிஷிகுமார் சுக்லாவின் நேரடி கண்காணிப்பில் இச்சோதனைகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

English summary
CBI is conducting searches at 110 places across 19 states in its probe on 30 cases of corruption, criminal misconduct.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X