திகார் சிறைக்கு அனுப்புங்க.. காவல் நீட்டிப்பு வேண்டாம்.. சிபிஐ கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற சிபிஐயின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை சிபிஐ காவலில் செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
சிபிஐ காவலுக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிதம்பரத்துக்கு இடைக்கால ஜாமீன் அல்லது கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.
56 கிலோ தங்கம்.. ரூ. 95 கோடி பணம்.. ஒரே ஒரு டைரியால் சிக்கிய பழனி சித்தனாதன் & கந்த விலாஸ்!
சிபிஐ
இதையடுத்து நீதிபதி கூறுகையில் சிதம்பரம் தனது ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர் சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அப்போது இன்று ஒரு நாள் வரை நீதிமன்றக் காவலை நீட்டித்த சிபிஐ நீதிமன்றம் இன்று பிற்பகல் விசாரிப்பதாக தெரிவித்தது.
கோரிக்கை
இந்த நிலையில் சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப உச்சநீதிமன்றம் விதித்த தடையை சிபிஐ உச்சநீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்தது. சிபிஐயின் கோரிக்கை குறித்து இன்று விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.
சிபிஐ காவல்
அதன்படி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ பதில் மனுவை தாக்கல் செய்தது. திகார் சிறைக்கு செல்லமாட்டேன் என ப.சிதம்பரம் கூறுவதா? அவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க விருப்பமில்லை.
காவல் நீட்டிப்பு
திகார் சிறைக்கு அனுப்ப வேண்டும் என சிபிஐ வாதிட்டது. எனினும் சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டித்தது.