கரூர் சாலையில் நிறைய வளைவுகள் இருந்துச்சு! அதான் 7 மணி நேரம் லேட்! சிபிஐயிடம் சொன்ன விஜய்?
டெல்லி: கரூர் வேலுச்சாமிபுரத்திற்கு நான் சென்று கொண்டிருந்த போது அங்கு சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்ததால் கரூருக்கு வர 7 மணி நேரம் தாமதம் ஆனது என சிபிஐ அதிகாரிகளிடம் விஜய் பதில் அளித்தார் என பல்வேறு டிவி ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து சாலைகளில் வளைவுகள் இருந்ததற்கு ஆதாரத்தை கொடுங்கள் என விஜய்யிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனராம்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், சிபிஐ அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கும் "காவல்துறை சொன்னதால்தான் கரூரை விட்டு வெளியேறினேன்" என்று ஒரே மாதிரியான பதிலையே திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறாராம் விஜய்.இந்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக, தவெக தலைவரான விஜய்யிடம் சிபிஐ இரண்டாவது நாளாக விசாரணை நடத்தியது. அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்திலிருந்து கட்சித் தலைவர்களுடன் விஜய் வெளியேறிவிட்டதாக கூறப்படும் கருத்து தவறானது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தாராம்.
மேலும், கூட்ட நெரிசல் சூழல் மோசமாகும் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியதால், அவர்கள் அமைத்து கொடுத்த பாதையில்தான் கரூரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் விஜய் விளக்கமளித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் பலியான நிலையில் கட்சித் தொண்டர்களை பொறுப்பற்ற முறையில் கைவிடவில்லை என்றும் அவர் கூறினாராம்.
கரூர் மாவட்ட போலீசாரும், நிர்வாகமும் ஜாக்கிரதையாகவும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட்டிருக்க வேண்டும். கூட்டம் அதிகமாக இருந்ததால், அதற்கேற்ப விரிவான ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். இதில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை என்ற பதிலையே விஜய் தொடர்ந்து அளித்துள்ளார்.
விஜய் அளித்த பதில்கள் சிபிஐ அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று தெரிகிறது. அவர் மீது சந்தேகம் இருப்பதால், குற்றம் சாட்டப்பட்ட நபராக சேர்ப்பதா அல்லது இன்னும் சில கேள்விகள் கேட்பதா என்று சிபிஐ அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலின்போது, தவெக தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாகவும், கரூர் மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் ஜாக்கிரதையாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் விஜய் தன்னுடைய பதிலில் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லியில் சிபிஐ அதிகாரிகளுடைய கேள்விகளுக்கு விஜய் தொடர்ந்து பதிலளித்து வருகிறார்.
கரூரில் நீங்கள் குடிநீர் பாட்டில்களை தூக்கி வீசும் போது கூட்ட நெரிசலை கவனிக்கவில்லையா? நெரிசலை தடுக்க வாகனத்தை நிறுத்தியிருக்கலாம், ஆனால் தொடர்ந்து பரப்புரை செய்துள்ளீர்கள்?
கூட்ட நெரிசலுக்கு இடையே உங்களுடைய பரப்புரை வாகனம் முன்னேறி வரும் காட்சிகள் உள்ளன. பிரபல நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான உங்களுக்கு எவ்வளவு கூட்டம் கூடுமென தெரியாதா? என கேள்வி எழுப்பினர்.
அது போல் கரூருக்கு 7 மணி நேரம் தாமதமாக சென்றது ஏன் என விஜய்யிடம் சிபிஐ கேள்வி எழுப்பியது. அதற்கு விஜய் சாலைகளில் பல்வேறு வளைவுகள் இருந்ததால் கரூருக்கு வர தாமதம் என தெரிவித்தாராம். அதற்கான ஆதாரத்தை இன்றைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என சிபிஐ, விஜய்க்கு உத்தரவிட்டது.
-
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..











Click it and Unblock the Notifications