அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமராக்கள்.. பெண்கள் பாதுகாப்புக்காக டெல்லியில் அதிரடி
டெல்லி: டெல்லியில் உள்ள 5,500 பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவர் அண்மையில் பலாத்காரம் செய்து, எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லியில் உள்ள 5,500 பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
மேலும் " ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும்.ஒவ்வொரு பேருந்திலும் பெண்களுக்காக 10 இடங்களில் அபாய ஸ்விட்ச்சுகள் அமைக்கப்படும். அத்துடன் வாகனம் எங்கு உள்ளது எனபதை அறியும் வசதியும் அமைக்கப்படும்.அனைத்து பேருந்துகளுக்கும் கட்டளைமையம்அமைக்கப்டும். இது பெண்களின் பாதுகாப்பை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்" என்றார்.