உத்தரகண்ட் வெள்ளம்... ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட் உள்ளிட்ட பிரபலங்கள் டுவிட்டரில் ஆறுதல்!
டெல்லி: உத்தரகண்ட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது ஆறுதல்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட், சேவாக், அக்ஷய் குமார் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
உத்தராகண்ட் மக்களே நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நடிகர் சோனு கூறியுள்ளார்.
உத்தரகண்ட் வெள்ளத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி... பிரதமர் அறிவிப்பு!
உத்தரகண்ட் சோகம்
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் தபோவான் என்ற இடத்தின் அருகே நீர் மின் திட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் திடீரென பனிப்பாறைகள் வெடித்துச் சிதறி, பனிச்சரிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் உள்ள தௌலிகங்கா ஆற்றில் கடும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
பிரதமர் மோடி
அச்சமயம் நீர் மின் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டு இருந்த சுமார் 100 பேர் அடித்து செல்லப்பட்டனர். இதுவரை 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த துயர சம்பவத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் உள்ளிட்டோர் ஆறுதல் தெரிவித்தனர். இதேபோல் திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் டுவிட்டரில் தங்களது ஆறுதல்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான், ரிஷப் பண்ட்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்:- உத்தராகண்ட்டில் உள்ள அனைவரின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்:- உத்தராகண்ட்டில் வெள்ளத்தில் பாதிப்படைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும். மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களால் உதவ இயலும் என நான் நம்புகிறேன்.
சேவாக், அக்ஷய் குமார்
வீரேந்திர சேவாக்:- உத்தராகண்ட் மக்களுடன் பிரார்த்தனை. நீங்கள் ஏதேனும் பாதிக்கப்பட்ட பகுதியில் சிக்கி ஏதாவது உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து பேரழிவு செயல்பாட்டு மைய எண்ணை 1070 அல்லது 9557444486 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
நடிகர் அக்ஷய் குமார்:- பனிச்சரிவு காட்சிகள் பயங்கரமாக இருந்தது, அனைவரின் பாதுகாப்பிற்காக எனது பிரார்த்தனைகள்.
நடிகர் சோனு:- உத்தராகண்ட் நாங்கள் உங்களோடு இருக்கிறோம்