இந்தியாவில் மட்டுமல்ல சர்வதேச அரசியலில் இருந்து துடைத்து எறியப்படும் இடதுசாரிகள்?
Recommended Video
டெல்லி: இந்தியாவில் மட்டுமல்ல சர்வதே அரசியல் களத்தில் இனி இடதுசாரிகள் முற்று முழுதாக துடைத்து எறியப்படுவர் என்பதையே ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இடதுசாரிகள் வெறும் 5 இடங்களில்தான் வென்றன. அக்கட்சிகளின் கோட்டைகள் அனைத்தும் தகர்ந்து போயின. திராவிட இயக்க பூமியான தமிழகத்தில் திமுக உதவியுடன் 4 இடங்களை இடதுசாரிகள் வென்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
10 கோடியா.. போய் தொகுதியை கவனிங்க.. கார்த்தி சிதம்பரத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி அட்வைஸ்
ஏன் மே.வங்க மாற்றம்?
இடதுசாரிகளின் கோட்டையான மேற்கு வங்கத்தில் அக்கட்சிகளில் உயர்ஜாதி இந்துக்களே அதிகம். அவர்கள் தங்களது எதிரிகளாக திரிணாமுல் காங்கிரஸை தீர்மானித்ததால் இந்துத்துவா கட்சியான அதாவது தத்துவார்த்த ரீதியில் எதிரி கட்சியான பாஜகவுக்கு வாக்களித்து தற்கொலை செய்து கொன்டனர்.
செங்கொடிகளின் இறுதி காலம்
இந்தியாவில்தான் இப்ப்டியான ஒரு நிலைமை என்று இல்லை. உலகம் முழுவதும் செங்கொடி கட்சிகளுக்கு இறுதி மணி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களை எடுத்துக் கொள்ளலாம்/.
இடது மையவாதிகளுக்கு சரிவு
ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்காக மொத்தம் 751 தொகுதிகளில் தேர்தல்கள் நடைபெற்றன. அங்கு விகிதாசார முறை தேர்தல் நடைமுறையில் உள்ளது. தற்போதைய தேர்தலில் இடது மையவாதிகள், வலது மையவாதிகள் பெரும்பான்மையை இழந்துவிட்டனர்.
வலது சாரி, வலது மையங்கள் ஓங்கும் கை
இடது மையவாதிகள் கடந்த தேர்தலில் 54% இடங்களைப் பெற்றிருந்தனர். தற்போது 43% இடங்களைத்தான் பெற முடிந்துள்ளது. வலதுசாரிகள், வலது மையவாதிகள் (சென்ட்ரிஸ்ட்ஸ்- கமல்ஹாசன் பேசும் 'மையம் கருத்தியல்வாதிகள்) கைகள்தான் சர்வதேச களத்தில் ஓங்கி வருகிறது.