இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை கேட்டு.. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய மேற்கு வங்க எம்பி
Recommended Video
டெல்லி: இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அகமத் ஹசேன் வலியுறுத்தி பேசினார்.
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரினால் வாழ்விடத்தைவிட்டு வசிப்பிடமாக தமிழகம் நோக்கி அகதியாக வந்தார்கள் இலங்கை தமிழ் மக்கள். அவர்கள் தமிழகத்தின் செங்கல்பட்டு, மண்டபம், உள்பட பல்வேறு இடங்களில் வசித்து வருகிறார்கள்.
பல ஆண்டுகளாக இங்கேயே வசித்து வரும் அவர்களுக்கு இந்திய அரசு இதுவரை குடியுரிமை வழங்கியதில்லை.
இந்நிலையில மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தின் போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அகமத் ஹூசைன் இலங்கை தமிழ் அகதிகளுக்காக குரல் எழுப்பி பேசினார். அப்போதுஅவர் கூறுகையில், "பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும்பிற மதங்களை சேர்ந்த இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என குடியுரிமை மசோதாவில் மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
செம ட்விஸ்ட்.. இதெல்லாம் சரியில்லை.. எடியூரப்பா வீட்டை பாஜக தொண்டர்கள் முற்றுகையிடுவதால் பரபரப்பு
இதேபோல் இலங்கையைச் சேர்ந்த தமிழ் அகதிகளுக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட வேண்டும் அல்லது இலங்கையில் மறு வாழ்வு அளிக்கப்பட வேண்டும்" என வலியுறுத்தினார்.