விவசாயிகள் போராட்டம்...இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை.... முடிவு கிடைக்குமா!
டெல்லி : வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் தொடர்ந்து 10-வது நாளாக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாய பிரதிநிதிகளுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும் இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இன்று நடைபெற உள்ள 5ம் கட்ட பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகள் 8-ம் தேதி நாடு தழுவிய பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அதற்குள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் 10-வது நாளாக போராடி வருகின்றனர். மத்திய அரசு போராடி வரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து தோல்வியை தழுவி வருவதால் விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதுவரை விவசாயிகளுடன் 4 கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை. இன்று 5ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.
மதியம் 2 மணிக்கு நடக்க உள்ள பேச்சுவார்த்தையில் வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். இன்று போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே 8-ந்தேதி நாடு தழுவிய பந்துக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்து உள்ளதால் உடனடியாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.