ராகுல் காந்தியின் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.. மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்
Recommended Video
டெல்லி: ராகுல் காந்தியின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் ராகுல் காந்தி நேற்றைய தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக 3 கி.மீ. தூரம் சாலை பிரசாரம் செய்தார். அந்த வாகனத்தில் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் இருந்தனர்.
அமேதி தொகுதியில்.. லேசர் துப்பாக்கியால் ராகுல் காந்தியை 7 முறை கொல்ல முயற்சி.. காங் அதிர்ச்சி புகார்
செய்தியாளர்கள் சந்திப்பு
அப்போது அவர் மீது கொலை முயற்சி நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டிவிட்டு உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சாலை பிரசாரத்தில் ஈடுபட்ட ராகுல் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கொல்ல முயற்சி
அப்போது ராகுலின் தலையின் மீது லேசர் ஒளி பாய்ந்தது. குறிப்பாக அவரது வலது தலையில் அந்த ஒளி பாய்ந்தது. இதனால் தூரத்திலிருந்து அழிக்கக் கூடிய லேசர் குண்டு மூலம் ராகுலை கொல்ல 7 முறை முயற்சி நடந்துள்ளது.
விசாரணை
எனவே உள்துறை அமைச்சகம் ராகுல் காந்திக்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும். மேலும் இந்த கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
போட்டோகிராபர்
இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கூறுகையில் ராகுல்காந்தியின் உயிருக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. பச்சை நிற லேசர் ஒளி காங்கிரஸ் போட்டோகிராபரின் கேமராவிலிருந்து வந்தது என தெரிவித்துள்ளது.