பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனை படை பாதுகாப்பு-- எஸ்பிஜி சட்டத்தில் விரைவில் திருத்தம்!
Recommended Video
டெல்லி: நாட்டின் பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனை படை பாதுகாப்பு எனப்படும் சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு வழங்குவதற்கு வகை செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர இருக்கிறது மத்திய அரசு.
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குடும்பத்துக்கான கறுப்பு பூனை படை பாதுகாப்பு அண்மையில் திரும்பப் பெறப்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் சோனியா குடும்பத்துக்கு கறுப்பு பூனை படை பாதுகாப்பு வழங்க திமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தின.
நேரில் வந்த ஸ்டாலின்.. தூது அனுப்பிய தேமுதிக.. உள்ளாட்சி தேர்தலில் திடீர் முக்கியத்துவம் பெறும் கமல்
இதனையடுத்து சிறப்பு கமாண்டோ பாதுகாப்பு எனப்படும் எஸ்பிஜி சட்டத்தில் திருத்தம் ஒன்றை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அடுத்த வாரம் இந்த திருத்தம் அறிமுகப்படுத்திடக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கறுப்பு பூனை படை பாதுகாப்பானது பிரதமர், அவரது குடும்பத்தினர், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் காலம் உள்ள வரை வழங்கப்படுகிறது. இனி நாட்டில் பிரதமருக்கு மட்டுமே கறுப்பு பூனைப்படை பாதுகாப்பு வழங்கும் வகையில் திருத்தம் கொண்டுவருகிறது மத்திய அரசு