நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்த இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம்!
Recommended Video
டெல்லி: நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திரயான் 1 விண்கலம் உறுதி செய்துள்ளது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 என்ற விண்கலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் புவியின் சுற்றுப்பாதையிலிருந்து பிரிந்த சந்திரயான் 2 இன்று காலை 9 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையை அடைந்தது.
இந்த விண்கலம் செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்துருவம் பகுதியில் தரையிறங்கும். இது இந்தியாவுக்கு பெருமிதத்தை அளிக்கிறது. இந்திய விண்வெளித் துறை அரிய பல சாதனைகளை செய்து வருகிறது.
செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1.55 மணி.. நிலவின் தென் துருவத்தில் கலக்கலாக தரையிறங்கும் சந்திரயான் 2
துல்லியம்
அந்த வகையில் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆய்வு மையம் சந்திரயான் 1 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதன் முக்கிய நோக்கமே நிலவின் பரப்பில் உள்ள தாதுக்களையும் வேதிபொருள்களையும் துல்லியமாக ஆராய்ச்சி செய்வதற்தாக ஆகும்.
விண்கலம்
இந்த சந்திரயான் 1 திட்டத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை ஆவார். மேலும் நிலவின் துருவ பகுதிகளில் நீர் அல்லது உறை பனி உண்டா என ஆராய்ச்சி செய்யவும் இந்த விண்கலம் அனுப்பப்பட்டது.
நாசா
இந்த நிலையில் நிலவின் மேற்பரப்பில் பனிக் கட்டிகள் உறைந்து கிடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவின் துருவ மண்டலத்தில் மிகவும் இருள் சூழ்ந்த பகுதி காணப்படுகிறது என்றும் அங்குள்ள குளிர் பிரதேசத்தில் தண்ணீர் ஐஸ் கட்டிகளாக மாறி இருப்பதையும் சந்திரயான் 1- தொழில்நுட்பம் மூலம் கண்டறிந்ததாக நாசா தெரிவித்தது.
விஞ்ஞானிகள்
எனினும் 100 சதவீதம் உறுதி செய்யப்படவில்லை. காற்று மண்டலம், மனிதன் உயிர் வாழ்வதற்கான சூழல் ஆகியவை குறித்து இந்த ஐஸ்கட்டிகள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் நிலவின் தென்பகுதியில் ஏராளமான ஐஸ் கட்டிகள் உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நிலவின் தென்துருவத்துக்கு சென்றுள்ள சந்திரயான் 2 என்ன கண்டுபிடிப்புகளை நமக்கு சொல்ல போகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆவலாக உள்ளனர்.