உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நவம்பர் 17ம் தேதி ஓய்வு.. வரலாற்றில் இடம் பெறுகிறார்!
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து புதிய தலைமை நீதிபதியின் பெயரை அவர் பரிந்துரைத்துள்ளார்
உச்ச நீதிமன்ற மரபுப்படி ஓய்வு பெற உள்ள தலைமை நீதிபதி தனக்கு அடுத்து நியமிக்க வேண்டிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பார்கள்,
அந்தஅடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தனக்கு அடுத்து மூத்த நீதிபதியான எஸ் ஏ பூப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமனம் செய்யும்படி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ம் தேதி ஓய்வு பெற உள்ளார். அதற்குள் அயோத்தி வழக்கில் அவர் தீர்ப்பு அளிக்க வேண்டியது உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்துவரும் அயோத்தி பிரச்சனைக்கு ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளிக்க உள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு மட்டுமல்ல இதை எழுதும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் அவரது தலைமையிலான நீதிபதிகளும் வரலாற்றில் இடம் பெறுவார்கள்.