பேசக்கூட தயாராக இல்லை.. அப்படியே ஆக்கிரமிக்க விரும்பும் சீனா.. விடாத இந்தியா.. இனி நடக்கும்!
டெல்லி: பாங்காங் திசோ ஏரி எல்லை பிரச்சனையை ஒரு பேசும் பொருளாக கூட ஏற்க சீனா தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது இரு நாடுகளுக்கு இடையில் இந்த பாங்காங் திசோ ஏரி பகுதி யாருக்கு சொந்தம் என்பது தான் இப்போது பூதாகரமான பிரச்சனையாகி வருகிறது. ஜூன் 14-15 தேதிகளில் நான்காவது சுற்று பேச்சுவார்த்தையில் இதை பற்றி பேசுவதற்கு தயங்கிய சீனா, இப்போது பாங்காங் திசோவை ஒரு சந்திப்பு புள்ளியாக ஒப்புக் கொள்ள கூட மறுத்துவிட்டது என்று பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
சீன இராணுவம் கால்வான் பள்ளத்தாக்கின் ரோந்து பாய்ண்ட 14 மற்றும் தெற்கே ஹாட் ஸ்பிரிங்ஸ் துறையில் ரோந்து பாய்ண்ட் 15 ஆகியவற்றில் விவாதிக்கப்பட்ட படி படைகள் குறைப்பாக முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதேபோல் கோக்ரா போஸ்டில் ரோந்து பாய்ண்ட் 17 ஏவிலும் படைகளை குறைத்துவிட்டது. ஆனால் இதுவரை இந்தியா அதிக அக்கறை காட்டி வந்த பாங்காங் ஏரி லைன் குறித்து சீனா பேசக்கூட தயாராக இல்லை, அதை முழுமையாக ஆக்கிரமிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.
நீண்ட காலம்.. அணிவகுக்க போகும் வீரர்கள்.. லடாக்கில் இந்தியா போடும் வின்டர் பிளான்.. சீனாவிற்கு கேட்!
அடம்பிடிக்கிறது
ஏனெனில் இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான ஒரு சந்திப்பு புள்ளியாக பாங்காங்கை ஒப்புக்கொள்ள சீனா விரும்பியது இல்லை. இதை பற்றி பேச்சுவார்த்தை அட்டவணையில் கூட இடம் பெறவிடமாமல் சீனா பிடிவாதம் பிடிக்கிறது. இதன் மூலம் மே மாதத்திற்கு முந்தைய நிலைமைகளை மாற்றுவதற்கான சீனாவின் தெளிவான நோக்கத்தின் மிக வெளிப்படையான உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்பை சீனா இரண்டு விஷயங்கள் மூலம் உறுதிப்படுத்தி உள்ளது.
சீனா பின்வாங்காது
முதல் விஷயம் சீனாவின் எல்லை தான் இருப்பதாகவும் சீன தூதர் கூறினார். இதன் மூலம் மேலும் படைகள் அங்கு பின்வாங்காது என்று இந்தியாவை ஆத்திரமூட்டும் வகையில் சீனா சமிக்ஞை காட்டி உள்ளது. பாங்காங்ஏரியின் ஃபிங்கர் 4-8 க்கு இடையிலான சர்ச்சைக்குரிய நீளமான எல்லையில் சீனா மே மாத தொடக்கத்தில் அத்துமீறியது. இப்போது பெயரளவில் மட்டுமே அங்கு மாற்றங்கள் காணப்படுகின்றன.
அக்சாய் சீன் பகுதி
இரண்டாவது விஷயம், கடந்த மூன்று வாரங்களாக பாங்காங்கின் ஆழமான பகுதிகளை கட்டமைப்பை மேம்படுத்தவும், அக்சாய் சீனின் பல விநியோக தளங்களை செயல்படுத்தவும் சீனா செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது.
முன்னேற்றம் இருக்காது
பாங்காங்கை பற்றி பேச சீனாவின் தயக்கத்தை இந்திய இராணுவம் ஏற்றுக் கொள்ளவில்லை, Finger complexஇல் தற்போதைய நிலைமை குறித்து நீண்ட் மற்றும் விரிவான பேச்சுவார்த்தை இல்லாமல் முன்னேற்றம் இருக்காது என்பதை இந்தியா சீனாவுக்கு உணர்த்தியுள்ளது. இந்திய இராணுவ லே கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் அவரது சீனப் பிரதிநிதி மேஜ் ஜெனரல் லின் லியு ஆகியோருக்கு இடையிலான ஐந்தாவது பேச்சுவார்த்தையின் இன்றைய சுற்று சனிக்கிழமை மாலை சீனத் தரப்பால் உறுதி செய்யப்பட்டது.
பரிசு பரிமாற்றம் இல்லை
நேற்று முன்தினம், ஆகஸ்ட் 1, மக்கள் விடுதலை இராணுவம் (பி.எல்.ஏ) தினம் ஆகும். மே மாத தொடக்கத்தில் மோதல் தொடங்கியதிலிருந்து உறவுகளில் விரிசல் விழுந்தததன் அறிகுறி எல்லையில் காணப்பட்டது. சுஷூலில் பி.எல்.ஏ தினத்தில் நடைபெறும் பாரம்பரிய சடங்கு இந்தியா-சீனா எல்லை ராணுவ வீரர்கள் கூட்டம் (பிபிஎம்) நேற்று முன்தினம் நடக்கவில்லை. ராணுவத்தின் கிழக்கு கமாண்டின் கீழ் முறையான வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன, ஆனால் பாரம்பரியமாக பரிசுப் பரிமாற்றம் எதுவும் இல்லை . கொரோனா வைரஸ் நெறிமுறைகள் மற்றும் கடந்த 90 நாட்களில் இரு நாடுகளுக்கு இடையிலான இராணுவ உறவுகளில் மோசமான நிலை காரணமாக பரிசு பரிமாற்றம் நடைபெறவில்லை.
உத்தரகண்டில் அத்துமீறலில்லை
இந்நிலையில் உத்தரகண்டிலிருந்து எல்லையைத் தாண்டி சீனத் துருப்புக்கள் லிபுலேக்கை ச் சுற்றி திரண்டு வருவதாக வெளியான தகவல்கள் "தவறானவை மற்றும் பொய்யானவை" என்று இராணுவ வட்டாரங்கள் பிரபல ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தன. முட்டுக்கட்டையாக உள்ள பாங்கோங் தவிர, ஞாயிற்றுக்கிழமை நடந்த பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்ட மற்றொரு முக்கிய விஷயம் டெப்சாங் பிரச்சினை.
அடிக்கடி மோதல் நடந்தது
ஜூன் மாத இறுதியில், வடக்கு லடாக்கின் டெப்சாங்-டிபிஓ துறைகளில் சீனா அத்துமீறலை தொடர்ந்து செய்த வந்தது. டெப்சாங்கில் பிரச்சனை பல ஆண்டுகளாக அதிகரித்து வந்தாலும், கிழக்கு லடாக்கில் சீனாவின் நேரடியான விரோத மோதலுடன் தொடர்புபடுத்த முடியாது. எனினும் அங்கு அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன என்பதால் தான் டெப்சாங்கை பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க இந்தியா கட்டாயப்படுத்தியது.
சீனா தொடர்ந்து அடாவடி
டெப்சாங்கில், சீனா முன்பை விட அதிக எண்ணிக்கையில் படைகளை விரிவுப்படுத்தியுள்ளது., வாகனங்களை கொண்டு இந்திய எல்லைக்குள் தற்காலிகமாக வந்து அத்து மீறல்களை தொடர்ந்து செய்து வருகிறது. இது பல ஆண்டுகளாக நடந்துள்ளது, இந்திய துருப்புக்கள் வழக்கமாக அவர்களைத் தற்காத்து கொள்ள பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்திய வீரர்கள் ரோந்தின் போது நடந்து செல்லும்போது, சீனத் தரப்பு உடனடியாக வாகனப் படையினரை நிறுத்தி ரோந்துப் பணியாளர்களைத் தடுத்து அவ்வப்போது அவர்களின் பாதைகளைத் தடுத்து அடாவடி செய்து வருகிறது.. இந்த மோதல்கள் ஏறக்குறைய பல காலமாக நடந்து வருகிறது. ஆனால் கடந்த மாதத்தில் சீனர்கள் குறிப்பிடத்தக்க ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. கடைசி சுற்று பேச்சுவார்த்தையில், இந்தியா டெப்சாங் பிரச்சினையை எழுப்பியபோது, இந்திய இராணுவம் சீன கட்டுப்பாட்டில் உள்ள பிராந்தியத்தில் ரோந்து குழுக்களை அனுப்பியதாக சீன குற்றம் சாட்டிது. எனவே தான் பேச்சுவார்த்தையில் டெப்சாங் முக்கிய இடம் பிடித்தது.