டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லையில் பதற்றம்.. அந்த விஷயத்தில்.. சீனா நேர்மையாக செயல்பட வேண்டும்.. இந்தியா எதிர்பார்ப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகள் தீர்மானத்தின் கிழக்கு லடாக்கில் முழுமையாக படைகளை விலக்கி விரிவாக்க நடவடிக்கைகளை கைவிடுவதில் சீனா உண்மையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம் என இந்தியா தெரிவித்துள்ளது.

Recommended Video

    China ஆக்கிரமிப்பு உண்மையா? காணாமல் போன Documents

    இந்தியா சீனா இடையே போர் பதற்றம் நீடித்து வந்த நிலையில் ஜூலை 5 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் தொலைபேசியில் பேசி படைகளை விலக்க ஒப்புக்கொண்டனர்.

    இரு நாட்டு எல்லை பிரச்சனை தொடர்பாக பேச்சுவார்த்தைகளுக்கான சிறப்பு பிரதிநிதிகளாக செயல்பட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். இதன்படி கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனா படைகளை விலக்கி கூடாரத்தை காலி செய்தது.

    மதுரை, கோவையில் அதிகரித்த மரணங்கள்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று.. லிஸ்ட் மதுரை, கோவையில் அதிகரித்த மரணங்கள்.. எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று.. லிஸ்ட்

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    ஆனால் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கிழக்கு லடாக்கில் பாங்காங் திசோ ஏரி பகுதியில் பதற்றம் நீடிக்கிறது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்து வைத்துள்ள சீனா படைகளை விலக்கி கொள்ள மறுத்துவிட்டதுடன். பாங்காங் திசோ ஏரி பகுதியை தங்கள் பகுதி என்று கூறி அதை பற்றிய பேச்சுவார்த்தைக்கு வர மறுக்கிறது.

    இந்தியா உறுதி

    இந்தியா உறுதி

    இந்நிலையில் கிழக்கு லடாக்கில் சீனா உடனான மோதல் குறித்த கேள்விகளுக்கு வியாழக்கிழமை பதிலளிக்கும் போது வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நடத்திய பேச்சுவார்த்தையை குறிப்பிட்டு, பேசினார். அப்போது அவர் கூறுகையில் "இரு சிறப்பு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையின் போது, ஏற்கனவே போடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களின் படி உண்மையான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் துருப்புக்களை முன்கூட்டியே மற்றும் முழுமையாக வெளியேற்றுவதற்கு ஒப்புக் கொண்டனர். இரு தரப்பு ஒப்பந்த நெறிமுறைகளுக்கு இணங்க இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் விரிவாக்க நடவடிக்கைகளை கைவிட்டு. அமைதி மற்றும் சமாதானத்தை முழுமையாக மீட்டெடுப்பது அவசியம் என்றும் ஒப்புக் கொண்டனர். இந்த நோக்கத்தை செயல்படுத்த வேண்டும் என இந்தியா உறுதியாக உள்ளது.

    நேர்மையாக செயல்பட வேண்டும்

    நேர்மையாக செயல்பட வேண்டும்

    சீனா தனது பகுதியில் முழுமையான படைகளை குறைத்த மற்றும் விரிவாக்க நடவடிக்கைகளை மற்றும் எல்லைப் பகுதிகளில் அமைதி மற்றும் சமாதானத்தை முழுமையாக மீட்டெடுப்பதற்காக எங்களுடன் நேர்மையாக செயல்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    மறு ஆய்வு செய்யப்படுமா?

    மறு ஆய்வு செய்யப்படுமா?

    இந்தியாவில் சீனாவின் கன்பூசியஸ் நிறுவனங்களின் செயல்பாட்டை இந்தியா மறுஆய்வு செய்கிறதா என்று கேட்கிறீர்கள். இதுபோன்ற மையங்களுக்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை அரசாங்கம் வகுத்துள்ளது., எந்தவொரு விதிமுறைகளையும் மீறுவது நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிலைக்கு கொண்டு செல்லும்.

    2009ல் வழிகாட்டுதல்கள்

    2009ல் வழிகாட்டுதல்கள்

    வெளிநாட்டு கலாச்சார மையங்களை நிறுவுவதற்கும் செயல்படுவதற்கும் வெளியுறவுத்துறையால் 2009 இல் விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த விதிமுறைகள் எந்தவொரு கன்பூசியஸ் மையம் உட்பட ஒரு தன்னாட்சி வெளிநாட்டு அமைப்பால் ஆதரிக்கப்படும் அல்லது நிதியளிக்கப்படும் எந்தவொரு கலாச்சார மையத்திற்கும் பொருந்தும்.

    அரசு வழிகாட்டுதல் படி

    அரசு வழிகாட்டுதல் படி

    இந்த வழிகாட்டுதலின் கீழ், அத்தகைய மையங்கள் ஒரு இந்திய அமைப்புடன் நுழைய விரும்பும் எந்தவொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் வெளியுறவுத்துறையின் ஒப்புதல் தேவைப்படுகிறது. இயற்கையாகவே, எந்தவொரு நிறுவனமும் இந்தியாவிற்கு நுழைய விரும்பினால் அல்லது நுழைந்தால், அரசாங்கத்தின் ஒப்புதல் தேவைப்படும். கலாச்சார மையங்களை நிறுவும் போது அரசின் ஒப்புதல் பெறாவிட்டால், அது அரசின் வழிகாட்டுதல் படி செயல்படவில்லை என்றே கருத முடியும்" இவ்வாறு கூறினார்.

    இந்தியா அதிரடி

    இந்தியா அதிரடி

    எல்லையில் சீனாவின் ஆக்ரோஷமான அத்துமீறலுக்கு பதிலடியாகல், இந்தியா சீன நிறுவனங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளைத் எடுக்க தொடங்கியுள்ளது.
    ஜூன் மாதத்தில், சீனாவை தளமாகக் கொண்ட 59 ஆப்களை அரசாங்கம் தடை செய்தது. இதைத் தொடர்ந்து மேலும் 47 சீன ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டது,

    English summary
    External Affairs Ministry Spokesperson Anurag Srivastava on Thursday said india expects China to work with it sincerely for ensuring "complete disengagement and de-escalation" in eastern Ladakh as decided by the Special Representatives of the two countries last month.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X