டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆயுதம் தேவையில்லை.. நிராயுதபாணியாவே வெளுப்பார்கள்.. சீன எல்லையில் இந்தியாவின் கட்டக் பிரிவு வீரர்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா - சீன எல்லையில் மோதலில் ஈடுபட சீனா தற்காப்பு கலை படை வீரர்களை களம் இறக்கிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் நிராயுதபாணிகளாக மோதுவதில் வல்லவர்களான இந்தியாவின் ராணுவத்தில் உள்ள கட்டக் பரிவு வீரர்கள் லடாக் எல்லையில் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா - சீன எல்லையில் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்று இரு நாடுகளிடையே ஒப்பந்தம் உள்ளது. இதனால் இரு நாடுகளிடையே பெரிதாக மோதல்கள் எழுந்தது இல்லை.

ஆனால் அண்டையில் இந்திய எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் சாலை அமைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா ராணுவத்தினர், திடீரென கல்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுக்கே சொந்தம் என்று சண்டை போட ஆரம்பித்தனர்.

கொரோனா போல பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள புதிய வைரஸ்.. சீன பன்றிப் பண்ணைகளில் கண்டுபிடிப்பு.. ஷாக் கொரோனா போல பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள புதிய வைரஸ்.. சீன பன்றிப் பண்ணைகளில் கண்டுபிடிப்பு.. ஷாக்

எல்லையில் ரோந்து

எல்லையில் ரோந்து

இதனால் இந்திய ராணுவத்தினருக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் அடிக்கடி கைலப்பு நடந்து வந்தது. இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்தது. இந்திய வீரர்களை எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட விடாமல் சீன வீரர்கள் கெடுபிடிகள் செய்து வந்தனர். இதனால் கடந்த ஜூன் 15 தேதி இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

20 வீரர்கள் மரணம்

20 வீரர்கள் மரணம்

இந்த மோதலில் இரு நாட்டு வீரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் சுமார் 40 பேர் இறந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் சீனா இதுவரை எத்தனை பேர் இறந்தனர் என்ற தகவலை வெளியிடாமல் மறைத்துவிட்டது. ஒரு சில வீரர்கள் மட்டும் இறந்ததாக அப்போது கூறியது.

 சீனாவின் தற்காப்புக்கலை வீரர்கள்

சீனாவின் தற்காப்புக்கலை வீரர்கள்

இந்நிலையில் ஜூன் 15ம் தேதி மோதல் நடப்பதற்கு முன்பு கிழக்கு லடாக் எல்லைக்கு சீனா தற்காப்புக்கலை பயின்ற வீரர்களை அனுப்பி வைத்தாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. அத்துடன் சீன ராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்க தற்காப்புக்கலை வீரர்கள் அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.

அடித்தே கொன்ற குர்தேஜ் சிங்

அடித்தே கொன்ற குர்தேஜ் சிங்

இதனிடைய இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனுக்குள்ளும் கட்டக் படை வீரர்கள் உள்ளனர். வழக்கமான காலாட்படை வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணியாக சண்டை போடுவதில் இவர்கள் வல்லவர்கள் ஆவர். கட்டாக் கமாண்டோக்கள் ஒரு காலாட்படை பட்டாலியனின் ஈட்டியின் 'முனை' போன்றவர்கள் ஆவர். பாதுகாக்கப்பட்ட எதிரி நிலைகள் மற்றும் விமானநிலையங்கள் மற்றும் பீரங்கி தளங்கள் போன்ற மூலோபாய வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமை உடையவர்கள் ஆவர்.

ராணுவத்தில் முக்கியமானவர்கள்

ராணுவத்தில் முக்கியமானவர்கள்

இதனிடைய இந்திய இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனுக்குள்ளும் கட்டக் படை வீரர்கள் உள்ளனர். வழக்கமான காலாட்படை வீரர்களுடன் ஒப்பிடும்போது, ஆயுத இல்லாமல் நிராயுதபாணியான சண்டை போடுவதில் இவர்கள் வல்லவர்கள் ஆவர். கட்டாக் கமாண்டோக்கள் ஒரு காலாட்படை பட்டாலியனின் ஈட்டியின் 'முனை' போன்றவர்கள் ஆவர். பாதுகாக்கப்பட்ட எதிரி நிலைகள் மற்றும் விமானநிலையங்கள் மற்றும் பீரங்கி தளங்கள் போன்ற மூலோபாய வசதிகள் மீது தாக்குதல் நடத்தும் வல்லமை உடையவர்கள் ஆவர்.

English summary
The Indian Army has, reportedly, responded to the claims of martial arts training for the PLA by stating that it had deployed its Ghatak commandos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X