மோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து சில நாட்களிலேயே இந்தியாவின் 3488 கிலோமீட்டர் எல்லையில் சீன ராணுவம் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தி வருகிறது.
இந்திய ராணுவ அதிகாரி இதுபற்றி கூறுகையில், எல்லையில் துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டு வீசும் பயிற்சிகளை தங்களது ராணுவ வீரர்களுக்கு இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா அளித்து வருகிறது. இதனை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்திய எல்லை கோடு வரை சாலை அமைக்கும் பணியினை சீனா தீவிரமாக்கி வருகிறது.
சீனா 2017- 2018ம் ஆண்டில் சுமார் 400 முறை பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இது 2018- 2019ம் ஆம் ஆண்டில் 450 ஆக உயர்ந்துள்ளது என்றார்.
சீனா தனது ராணுவ வீரர்களுக்கு இரண்டு பதிய பயிற்சி முறைகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது. பயிற்சியல் கொடுக்கப்பட்ட பணியை முடிக்காத தங்கள்து ராணுவ வீரர்களுக்கு தண்டனையை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் இந்த துப்பாக்கிச்சூடு பயிற்சி பல ஆயிரம் மைல் நீளத்திற்கு நடந்து வருவதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.