கொரோனா அதிகரிப்பு.. சிஐஎஸ்சிஇ 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு!
டெல்லி: சிஐஎஸ்சிஇ நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ நடத்தும் 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும்
இந்த நிலையில் சிஐஎஸ்சிஇ நடத்தும் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ;; கொரோனா தீவிரமாக பரவுவதால் அதனை கருத்தில் கொண்டு ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் முதல் வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்த இறுதி முடிவு அறிவிக்கப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது.
சிஐஎஸ்சிஇ 10-ம் வகுப்பு தேர்வு மே 5-ம் தேதியும், 2-ம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 8-ம் தேதியும் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.