குடியுரிமை சட்ட திருத்தம் LIVE: ராஜ்யசபாவிலும் நிறைவேறியது குடியுரிமை சட்ட திருத்தம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் 8 மணி நேரம் வரை தொடர்ந்து நடந்தது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்றுமுன்தினம் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன.
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இஸ்லாமியர் தவிர்த்து அந்த மூன்று நாடுகளில் இருந்து வரும் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Citizenship Amendment Bill will be discussed and came for the vote in Rajya Sabha today.