பாக்., வங்கதேச இஸ்லாமியர்களை ஏற்க முடியாது.. குடியுரிமை வழங்க முடியாது.. அமித் ஷா பரபரப்பு பேச்சு!
டெல்லி: ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என்று அமித் ஷா லோக்சபாவில் பேசி உள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விவாதம் இன்று 6 மணி நேரம் நடக்கும். இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
குடியுரிமை திருத்த மசோதாவை இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் எழுத வேண்டும்: பிரதமர் மோடி
மக்கள் எப்படி
இந்த மசோதாவை ராஜ்ய சபாவில் தாக்கல் செய்த அமித் ஷா தனது பேச்சில், பல லட்சம் மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும். நாடற்ற மக்களுக்கு இந்த சட்டம் நம்பிக்கை அளிக்கும். துன்பப்படும் மக்களுக்கு இந்த சட்டம் ஒரு வாய்ப்பு கொடுக்கும். துன்பப்படும் சிறுபான்மையினருக்கு இதனால் வெளிச்சம் கிடைக்கும்.
என்ன உரிமை
அவர்களுக்கான உரிமை கிடைக்க இதன் மூலம் வழி வகை செய்யப்படும்.பாகிஸ்தான், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. சிறுபான்மையினர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்திருக்கலாம்.
வங்கதேசம்
பாகிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து சிலர் இந்தியா வந்து நிம்மதியாக இருக்கிறார்கள். நாங்கள் இந்த சட்டத்தை வாக்கு வங்கிக்காக செய்யவில்லை.நாங்கள் இந்த சட்டத்தை லோக்சபா தேர்தலுக்கு முன்பே கொண்டு வர முயற்சி செய்தோம். எங்களுக்கு வடகிழக்கு மக்களின் நன்மையே முக்கியம்.
சிறுபான்மை
இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று சிலர் வதந்தி பரப்புகிறார்கள். இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் இதனால் பயப்பட கூடாது. பாகிஸ்தானில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. ஆப்கானிஸ்தானில், வங்கதேசத்தில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. இந்த சட்டம் அப்படி செயல்படாது, என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.