இந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்!
டெல்லியில் நடக்கும் மாணவர் போராட்டம் வெளிநாட்டினர் செய்யும் கலவரம் என்று தமிழக பாஜக டிவிட் செய்துள்ளது.
Recommended Video
டெல்லி: டெல்லியில் நடக்கும் மாணவர் போராட்டம் வெளிநாட்டினர் செய்யும் கலவரம் என்று தமிழக பாஜக டிவிட் செய்துள்ளது. அங்கு போராட்டம் செய்யும் யாரும் இந்தியர்கள் அல்ல என்று தமிழக பாஜக குறிப்பிட்டு இருக்கிறது.
கடந்த 4 நாட்களாக நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. அசாமில் தொடங்கிய போராட்டம் தற்போது நாடு முழுக்க விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லியில் நேற்று ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
அந்த போராட்டம் நாடு முழுக்க வேகமாக பரவியது. தற்போது டெல்லி தொடங்கி கேரளா வரை பல மாநிலங்களில் போராட்டம் கடுமையாக நடந்து வருகிறது.
தமிழக பாஜக தனது டிவிட்டில், ஒரு இந்தியர் பாகிஸ்தானில் இதுபோன்ற ஒரு கலவரத்தில் ஈடுபட முடியுமா, அதை அந்த மக்கள் அனுமதிப்பார்களா?
ஒரு இந்தியர் பாகிஸ்தானில் இதுபோன்ற ஒரு கலவரத்தில் ஈடுபட முடியுமா, அதை அந்த மக்கள் அனுமதிப்பார்களா?
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 15, 2019
பக்கத்து நாட்டு எல்லைக்கு மீன்பிடிக்க சென்றாலே சுட்டுக்கொல்லும் நாடுகள் மத்தியில், வெளிநாட்டினர் செய்யும் கலவரத்தை நிதானமாக கையாளும் மத்திய அரசின் செயல் மனிதாபிமானத்தின் உச்சம். pic.twitter.com/92UTWbb6Tw
பக்கத்து நாட்டு எல்லைக்கு மீன்பிடிக்க சென்றாலே சுட்டுக்கொல்லும் நாடுகள் மத்தியில், வெளிநாட்டினர் செய்யும் கலவரத்தை நிதானமாக கையாளும் மத்திய அரசின் செயல் மனிதாபிமானத்தின் உச்சம், என்று டிவிட் செய்துள்ளது.
பாஜகவின் இந்த டிவிட் பெரிய அளவில் வைரலாகி நிறைய விமர்சனங்கள், விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.