டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாலியல் புகார் வழக்கு.. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன் ஆஜரான தலைமை நீதிபதி.. 1 மணி நேரம் விசாரணை!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கும் பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Ranjan Gogoi: பாலியல் புகார் வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்- வீடியோ

    டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கும் பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டு உள்ளது.

    அதேபோல் இன்னொரு பக்கம் ரஞ்சன் கோகாய்க்கு எதிரான புகார் பொய்யானது, அது சூழ்ச்சி என்று வழக்கறிஞர் பெயின்ஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

    காதலருடன் சீருடையில் கட்டிலில் காதல்.. வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு காதலருடன் சீருடையில் கட்டிலில் காதல்.. வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு

    எப்படி விசாரணை

    எப்படி விசாரணை

    உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது 35 வயதாகும் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 22 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இது தொடர்பாக அந்த பெண் பிரமாணபத்திரம் அனுப்பி உள்ளார். இந்த புகார், நீதிமன்ற உள்விசாரணையாக நடக்கிறது. நீதிமன்ற விவகாரம் என்பதால் கண்ணியம் காப்பதற்காக உள் விசாரணை நடத்தப்படுகிறது.

    ஆஜர் ஆனார்

    ஆஜர் ஆனார்

    உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்ஏ போப்பே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது. இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தனக்கு எதிராக சுமத்தப்பட்டு இருக்கும் பாலியல் புகார் தொடர்பான வழக்கின் விசாரணையில் நேற்று ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நேற்று சுமார் 1 மணி நேரம் அவர் இந்த விசாரணையில் கலந்து கொண்டார்.

    வீடியோ

    வீடியோ

    இந்த விசாரணை மொத்தமும் வீடியோ எடுக்கப்பட்டது. இந்த விசாரணை குறித்த அறிக்கை சீலிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் இந்த விசாரணையில் என்ன விதமான கேள்விகள் எழுப்பப்பட்டது என்பது குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகாது.

    முடிவு என்ன

    முடிவு என்ன

    இந்த வழக்கில் விசாரணை அடுத்த வாரம் செவ்வாய் கிழமை வரை நடைபெறும். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் அளித்த பெண், அதன் மீதான விசாரணையில் ஆஜராக மாட்டேன் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். நான் இனி இந்த விசாரணையில் கலந்து கொள்ள மாட்டேன். என்னிடம் அதற்கான தைரியம் கிடையாது என்று இவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Supreme Court CJI Ranjan Gogoi appears before panel probing harassment case against him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X