டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிஏஏவை கண்டித்து பேரணி.. ஜாமியா பல்கலை மாணவர்கள்- போலீஸார் இடையே தள்ளுமுள்ளு.. டெல்லியில் பரபரப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கினர்.. லத்தியால் அடித்தனர்.. போலீஸ் மீது ஜாமியா மாணவிகள் பகீர் புகார் - வீடியோ

    டெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து டெல்லியில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடியுரிமை பெற தகுதியானவர்கள் என அரசு அறிவித்துள்ளது. மேலும் அந்த 3 நாடுகளில் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், பார்சி, புத்த மதத்தினர், சீக்கிய மதம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தகுதியுடையவர் என மத்திய அரசு வரையறை நிர்ணயித்துள்ளது.

    Clash between students of Jamia and Police ongoing march towards Parliament

    இதில் முஸ்லீம்கள், இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்டோரின் பெயர்கள் விடுபட்டுள்ளது. இதை கண்டித்து டெல்லியில் போராட்டம் நடைபெறுகிறது. அது போல் ஜாமியா பல்கலைக்கழகத்திலும் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காவல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணி செல்ல முயன்றனர்.

    பெங்களூரில் ஒரு பெங்களூரில் ஒரு "ஷாகீன்பாக்".. பிலால் மசூதியில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து களமிறங்கிய பெண்கள்

    அப்போது அவர்களை போலீஸார் ஓக்லாவில் உள்ள ஹோலி பேமிலி மருத்துவமனை அருகே வழி மறித்தனர். அப்போது போலீஸாரை தள்ளிவிட்டு பேரிகாடுகளில் ஏறி குதித்தனர். மேலும் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வது என்பதில் மாணவர்கள் உறுதியாக இருந்தனர்.

    அப்போது போலீஸார் உங்களுக்கு பேரணி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே பேரணி செல்லாமல் இந்த இடத்தில் போராட்டம் நடத்தி விட்டு செல்லுங்கள் என போலீஸார் தெரிவித்தனர். அப்போது போராட்டக்காரர்கள், நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்வது எங்களது உரிமை.

    நாங்கள் பேரணியை தொடர்வோம் என்றனர். அப்போது போலீஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் தண்ணீர் பீய்ச்சியும் அடித்தனர். இதனால் டெல்லியில் பரபரப்பு எழுந்துள்ளது.

    English summary
    A Clash between Jamia lilia univesrity students and security forces amid ongoing march.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X