அமேதியிலும் நிச்சயம் ராகுல் வெல்வாராம்.. அப்போ பிரியங்காவும் எம்பியாகிவிடுவார் போல!
டெல்லி: அமேதி தொகுதியில் ராகுல் காந்தி நிச்சயம் வெல்வார் என சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று முன் தின் வெளியானது. இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் பெரும் இழுபறி இருக்கும் என கூறுகிறது.
இந்த போட்டியில் ராகுல் காந்தியே வெல்வார் என்று சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. ராகுல் காந்தி தனது தந்தையின் தொகுதியான அமேதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்.
இவர் அமேதி மட்டுமில்லாமல் வயநாட்டிலும் போட்டியிட்டுள்ளார். ராகுலுக்கு டஃப் கொடுக்க பாஜக ஸ்மிருதி இரானியை அமேதியில் நிறுத்தியுள்ளது. ஸ்மிருதியோ தான் போட்டியிடுவதால் நிச்சயம் தோல்வியை சந்திப்போம் என்பதாலேயே ராகுல் வயநாட்டில் போட்டியிட்டுள்ளார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
என் அப்பாவை ரொம்பவும் மிஸ் பண்றேன்.. ராகுல் காந்தி உருக்கம்
பிரியங்கா காந்தியை கட்சிக்குள் நேரடியாக கொண்டு வந்தாகிவிட்டது. அரசியலுக்கு கொண்டு வர அவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காங்கிரஸோ பக்கா வியூகம் வகுத்துவிட்டது. அதாவது அமேதியிலும், வயநாட்டிலும் போட்டியிடும் ராகுலின் அமேதி வெற்றி நிச்சயமான ஒன்று.
எனவே வயநாட்டிலும் ராகுல் வெற்றி பெற்றுவிட்டால் அமேதி தொகுதியை ராஜினாமா செய்து விடுவார் ராகுல். அப்போது அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை நிறுத்தினால் எளிதில் வெற்றிக் கனியை பறிக்க முடியும் என்பது காங்கிரஸின் கணக்கு.
இந்த நிலையில் கருத்து கணிப்புகளும் ராகுல் காந்தி அமேதியிலும் வயநாட்டிலும் வெற்றி பெற்றுவிடுவார் என கூறுவதால் பிரியங்காவும் அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்றே காங்கிரஸ் கட்சியினர் நம்புகின்றனர்.